திரு SKP, என்னுடைய குரு...
என் வாழ்க்கையை தொடக்கியவயர்..
பத்துக்கு பன்னிரண்டு அறை.....
அவருக்கு ஒரு S இருக்கை....
எனக்கும் சிவாவுக்கும் ஆளுக்கொன்று...
எனக்கு மட்டும் drawing pad & mini drafter. .
அன்று செய்த மெஷினும் மினி தான்..
இன்றுஅவரே மதர் மெஷின் செய்தார்...
இன்னும் பாஸ் ஆகாத ஒருவனுக்கு வேலை கொடுத்த தைரியம்....
யோசனையிலேயே ஒரு இயந்திரத்தை கட்டும் தைரியம் கொண்டவருக்கு இது எம்மாத்திரம்?
பொறியியல்..... அவரிடம் பயின்ற பின் தானே இன்னதென்று அறிந்தோம்?
பத்து பாடம் சேர்த்து எழுதினேன் , தேறிவிடுவேன் என்று எனக்கு முன் அவர் நம்பினார்...
ஆயிரத்திலிருந்து நாலாயிரத்துக்கு சம்பளத்தை உயர்த்தினார்..
உயர்தர drawing board நிறுவினார்...
என்னை எழுந்து நிற்க வைத்தார்...
தலைகீறி என் படத்தில் கைவைக்காதீர்... எண்ணை படிகிறது..என்றால்.. ... தப்பைதான் நான் கைவைத்தேன்.. முதலிலிருந்து வரை என்பார்...
"Technically arrogant" என்பேன் நான்..
"plan B" யே இல்லாமல் வேலை செய்த ஒரே மனிதர் அவர்...
அவ்வளவு தைரியம்... தன்னம்பிக்கை..
தகுதி குறைந்தவனை ஏன் வளர்க்கணும்?.. என கேட்டால்,
தெரிந்தவனுக்கு எதற்கு சொல்லனும் ?
உனக்குதான் கற்றுகொடுக்கணும்..
என்று எதையும் simple ஆக்குவார்..
உணர வேண்டும், google இல்லா நேரத்தில் அவர் பேரறிஞர்...
Bearing நம்பர் சொன்னால் அளவு கண்டுபிடிக்க சொல்லிக்கொடுப்பார்..
பொறி மட்டுமல்ல மொழியிலும்..
அம்மா அப்பா போல அங்ஙாடி தானே சரி? நீ ஏன் அங்காடி என்கிறாய் ? என்பார்..
அவர் என்னை கோபப்படுத்தியதை விட,
நான் படுத்தியது அதிகம்...
இதில் மட்டும் தான் ஜெயம்...
ஆனால் அவரிடம் ஒவ்வொரு முறை தோற்பதிலும் ஒரு படிக்கல் உயரலாம்..
இனி யாரிடம் தோற்பேன் ?
எப்படி உயருவேன்?